Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Sunday, 4 January 2015

எந்நாட்கண்ணி (பாடல் 1)

சீர்மிகு தாயுமானார் அருளிய
எந்நாட்கண்ணி - உரை
                                                                                  - முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள்


தெய்வ வணக்கம்
சிவபரம் பொருள்

நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும்
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளே

     நீர்             - கங்கை
     பூத்த        - பொலிவுடன் விளங்குகின்ற
     வேணி    - சடை
     நிலவு        - பிறை மதியின் ஒளி
     எறிப்ப       - வீச
     மன்று        - சிதம்பரத்தில் உள்ள  ஞான சபை, மன்றுள் நின்று என்க
     ஆடும்        - ஆனந்தத் தாண்டவம் செய்யும்
     கார்             - கருமை, நஞ்சினால் உண்டாகிய கருநிறம்
     கண்டன்    - கழுத்து உடையவன்
     காணுதல் - தன் (ஆன்ம) அறிவில் விளங்கும்படி அறிதல், “பதியை ஞானக்                                  கண்ணினில் சிந்தை நாடுக” - சிவஞான போதம் நூ.9

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.